கசக்கும்வரை!
கந்தையானாலும் கசக்கிக் கட்டு - பழமொழி!
கசக்கும்வரை எதை கட்டுவது?
கந்தையானாலும் கசக்கிக் கட்டு...
இது கசக்கி கசக்கியே கந்தையானது...
குளித்தாலாவது!
கூழானாலும் குளித்துக் குடி - பழமொழி!
குளித்தாலாவது கூழ் கிடைக்குமா?
குளிக்கின்றேன் கூழ் இல்லாவிட்டாலும்
குடிக்க தண்ணீராவது தாருங்கள்!
பட்டு நூல்
ஆயிரமாயிரம் பட்டுப்பூச்சிகள் விதவையாகின்றன
ஒரு விதவை சுமங்கலி ஆவதற்கு!
தன் வாயினாலே தனக்கு தூக்குக்கயிறு
தயாரிக்கும் ஒரே இனம் - பட்டுப்பூச்சி
தன் கண்ணே தன்னை குத்தும்...
பட்டுப்பூச்சியின் பட்டுநூலே சாட்சி!
எரியப்போவதில்லை
இரண்டு விறகுகள் தூக்கிச்சென்றால்
வியர்வையில் நனைந்து எரிய மறுக்குமென்றா
நீ இத்தனை சுமந்து செல்கின்றாய்?
இப்பொழுதும் உன் விறகில் நான்கு எரியப்போவதில்லை!
உழவன்
எனக்கும் பூமிக்கும் நெருங்கிய உறவு உண்டு.
செருப்பு இல்லை - நடக்கும் போது!
பாய் இல்லை - உறங்கும் போது!
பொடி இல்லை - பல் துலக்கும்போது!
உடல் முழுதும் மண் தான்.
பானையும் மண் தான்!
பானையிலும் மண் தான்!
பார்ப்பதெல்லாம் மண் தான்.
செருப்பு இல்லை - நடக்கும் போது!
பாய் இல்லை - உறங்கும் போது!
பொடி இல்லை - பல் துலக்கும்போது!
உடல் முழுதும் மண் தான்.
பானையும் மண் தான்!
பானையிலும் மண் தான்!
பார்ப்பதெல்லாம் மண் தான்.