வீணையடி நீ எனக்கு! (தொடர்கதை)
அத்தியாயம் - 1
தஞ்சையில் பெரியகோவில் வாசலில் ஒரு அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பேனரில் பூக்களினாலே
மணமகன்: வர்மன்
மணமகள்: வானதி
திருமணத்திற்கு அனைவரும் வருகை தந்து மணமக்களை சீரும் சிறப்புமாக நீடூழி வாழ வாழ்த்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
இப்படிக்கு:
மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்.
என்று எழுதப்பட்டிருந்தது..
வர்மன்... வானதி! இந்த இரண்டு பெயர்களையும் எங்கோ கேட்டது போல் இருக்கிறதே?
எங்கே? மிகவும் தெரிந்த பெயர்கள்... ஆஹா ஆஹா...இந்த கோவிலிலா? இப்படியும் கூட நடக்குமா? ஒருவேளை அவர்கள் தானோ? இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்....வர்மன்...ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழரின் சுவாசம்...வானதி இது வர்மனின் சுவாசம்...ஆம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்த பெயர்கள் தெரியாத ஜீவனே இருந்ததில்லை... வர்மன்...இராஜராஜன் என்றழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன். வானதி...வானதி என்றே அழைக்கப்பட்ட வானவன் மாதேவி...
அவ்விருவருக்கும் திருமணம். ஆஹா எல்லாமே பொருத்தமாக இருக்கிறது!
கோவிலில் நெற்றியில் பட்டயம் கட்டி தலையில் பட்டு துணியால் செய்த கிரீடம்
அதே சாயல் அதே லட்சணம் அதே சிரிப்பு... மணமகன். அதே அழகு, அதே பணிவு அதே வெட்கம்... மணமகள்... வருடங்கள் மட்டும் தான் மாறி இருக்கிறதோ?
தஞ்சையில் பெரியகோவில் வாசலில் ஒரு அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பேனரில் பூக்களினாலே
மணமகன்: வர்மன்
மணமகள்: வானதி
திருமணத்திற்கு அனைவரும் வருகை தந்து மணமக்களை சீரும் சிறப்புமாக நீடூழி வாழ வாழ்த்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
இப்படிக்கு:
மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்.
என்று எழுதப்பட்டிருந்தது..
வர்மன்... வானதி! இந்த இரண்டு பெயர்களையும் எங்கோ கேட்டது போல் இருக்கிறதே?
எங்கே? மிகவும் தெரிந்த பெயர்கள்... ஆஹா ஆஹா...இந்த கோவிலிலா? இப்படியும் கூட நடக்குமா? ஒருவேளை அவர்கள் தானோ? இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்....வர்மன்...ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழரின் சுவாசம்...வானதி இது வர்மனின் சுவாசம்...ஆம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்த பெயர்கள் தெரியாத ஜீவனே இருந்ததில்லை... வர்மன்...இராஜராஜன் என்றழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன். வானதி...வானதி என்றே அழைக்கப்பட்ட வானவன் மாதேவி...
அவ்விருவருக்கும் திருமணம். ஆஹா எல்லாமே பொருத்தமாக இருக்கிறது!
கோவிலில் நெற்றியில் பட்டயம் கட்டி தலையில் பட்டு துணியால் செய்த கிரீடம்
அதே சாயல் அதே லட்சணம் அதே சிரிப்பு... மணமகன். அதே அழகு, அதே பணிவு அதே வெட்கம்... மணமகள்... வருடங்கள் மட்டும் தான் மாறி இருக்கிறதோ?